தீவிர பொருளாதார வசதியீனங்களின்
மத்தியில் பேணி வரப்படுகின்ற
முன்பள்ளிகள், மற்றும் பௌத்த, இந்து,
இஸ்லாமிய, கிறிஸ்தவ
/ கத்தோலிக்க
அறநெறிப் பாடசாலைகளுக்கு அனுசரணை
வழங்குவோம்
இலங்கையின் பல பகுதிகளில் முன்
பிள்ளைப் பருவக் கல்வித்திட்டங்களில்
பயன்படுத்தப்பட வேண்டிய குறைந்தபட்ச
வசதிகள் கூட இல்லாத நிலையிலேயே
முன்பள்ளிகள் பேணி வரப்படுகின்றமை
புலனாகின்றது.
பெரும்பாலான முன்பள்ளி
நிர்வாகிகளுக்கு முன்பள்ளிகளில்
கற்றல் - கற்பித்தல் செயற்பாடு
தொடர்பான சிக்கல்களைப் போன்றே மூலதனப்
பண்டங்களின் தட்டுப்பாடும் பாரிய
நெருக்கடியாக அமைந்துள்ளது.
முன்பள்ளிக் கல்வியானது பிள்ளையின்
வாழ்க்கைக்கான அத்திவாரமாக அமைந்துள்ள
போதிலும் இதன் காரணமாக மேற்படி
அத்திவாரம் சிதைவடையும் நிலையில்
பிள்ளைகளின் எதிர்காலம் சோகமயமான
நிலையை அடையக்கூடிய அபாயநேர்வுச்
சாத்தியம் நிலவுகின்றது.
பௌத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க
/
கிறிஸ்தவ அறநெறிப்பாடசாலைக்
கல்வியானது நாட்டின் ஆன்மீகத்தைப்
போன்றே நன்னெறிகளின் விருத்திக்கும்
முக்கியமானதாக அமைந்த போதிலும்
இந்நிறுவனங்கள் மீதும் மேற்படி
வசதியீனங்கள் தாக்கமேற்படுத்தி உள்ளன.
1.
ஆசிரியர்
பயிற்சி
நிகழ்ச்சித்திட்டங்களை
அமுலாக்குதல்
2.
ஆசிரியப்
பெருந்தகைகளை
ஊக்குவிக்கும்
பொருட்டு
சீருடைகளை
வழங்குதல்
மற்றும்
பாராட்டு,
மதிப்பீட்டு
வைபவங்களை
ஏற்பாடு
செய்தல்
3.
பிள்ளைகளுக்கான
போசாக்கு
நிகழ்ச்சித்திட்டங்கள்,
சீருடைகள்,
புத்தகங்கள்
மற்றும்
கல்விச்
சாதனங்களை
வழங்குதல்
4.
இக்கல்வி
நிறுவனங்களுக்கு
அவசியமான
கட்டடங்கள்,
கல்வித்
துணைச்
சாதனங்கள்,
கருவிகள்
மற்றும்
பிரயோக
செயற்பாடுகளுக்கு
அவசியமான
பண்டங்களை
வழங்குதல்
5.
பெற்றோர்களை
விழிப்பூட்டுவதற்கான
பயிற்சி
நிகழ்ச்சித்திட்டங்களை
நடாத்துதல்
முக்கியமானதாகும்.
உங்களின் பெயரில் அல்லது காலஞ்சென்ற
உறவினது பெயரில் இத்தகைய
கருத்திட்டங்களுக்காக அனுசரணை
வழங்குமாறு நாங்கள் உங்களை
அழைக்கின்றோம்.
தெரிவு செய்தல்
1.
சம்பந்தப்பட்ட பிரதேசத்தின்
கிராம உத்தியோகத்தர், பிரதேச
செயலாளரின் விதப்புரை
2.
பிரதேசத்தின் சமய நிலையத்தின்
பிக்குவின்
/ மதகுருவின்
விதப்புரை
3.
நிலையப் பரிசோதனை,
நிழற்படங்கள் மற்றும் தொடர்
நடவடிக்கை மூலமாகத் தெரிவு
செய்யப்படும்.