தகவல்களைப் பெற்றுக்கொள்ளவூம்
வெளியிடவும் உள்ள ஆற்றலைப்
பலப்படுத்தக்கூடியவாறு ஒவ்வோர்
இலங்கையரினதும் கருத்து
வெளிப்பாட்டு உரிமையை
உறுதிப்படுத்தும் பொருட்டு ஊடகச்
சுதந்திரம் பாதுகாக்கப்பட
வேண்டுமென்பது,
»
இலவசக் கல்வி மரபுகள்,
சுதந்திரமான சந்தைப்
பொருளாதாரம், திறந்த
மற்றும் வெளிப்படைத்தன்மை
கொண்ட அரசாட்சி,
பொறுப்புக்கூறல் மற்றும்
வகைகூறலுடனான சுதந்திரம்,
நீதித்துறையின் பூரண நீதி
மற்றும் சட்டத்தின் ஆட்சி
பாதுகாக்கப்படல்
வேண்டுமென்பது,
»
அனைவருக்கும் தமது சக்திகள்,
திறமைகள் மற்றும் ஆற்றல்களை
அபிவிருத்தி செய்வதற்கான
வாய்ப்புகள் வழங்கப்படல்
வேண்டுமென்பது,
»
ஆண் - பெண் சமத்துவம்
உறுதிப்படுத்தப்படல்
வேண்டுமென்பது,
»
சமூக அநீதியை ஒழித்தல்,
வறுமையிலிருந்து மீட்சிபெற
உதவுதல் மற்றும்
சிறப்புரிமைகள் குறைந்த
மக்களுக்கு மிகவும் சாதகமான
வாழ்க்கைத் தரத்தைப்
பெற்றுக்கொடுக்க
வேண்டுமென்பது,
»
அனைவருக்கும் மிகச்சிறந்த
வாழ்க்கைப் போக்கினை
நிறுவவேண்டுமென்பதும் உணவு,
உடை, உறையுள், கல்வி,
சுகாதாரம், மற்றும்
அபிவிருத்திக்கான
வாய்ப்புக்கள் தொடர்பான
அடிப்படைப் நிலைமைகளைச்
சமமாகப் பெற்றுக்கொள்ள உரிமை
உள்தென்பதும்,
»
அரசாட்சியின் ஒவ்வொரு
பிரிவிலும் அடிமட்ட மக்களின்
பங்கேற்பு விளங்க
வேண்டுமென்பதும் பிரதேச
சனசமூகத்தவர் கிராமிய
அபிவிருத்தியின் முனைப்பான
தரப்பினர்களாக ஆக்கப்படல்
வேண்டுமென்பதும்,
»
மிகச்சிறந்த வாழ்க்கை
மட்டத்திற்கான உயர்ந்த
வாய்ப்புக்களையும் இடவசதி
களையும் உருவாக்கும் பொருட்டு
தனியார்துறையின்
பங்கேற்பிற்கு அதிக
பங்களிப்பு காட்டப்படல்
வேண்டுமென்பது,
»
தொழிலின்மையால்
பாதிக்கப்பட்டுள்ள
பிரிவினருக்கு அதிகளவில்
தொழில் வாய்ப்புக்களை
உருவாக்க வேண்டுமென்பது,
»
பிரத்தியேக
தொழில்முயற்சிகள்.
வீடுகள் காணிகளை
உரித்தாக்கிக் கொள்ளவும்
சேமிப்புக் கணக்குகளைப்
பேணிவர அல்லது இலங்கைப்
பொதுமக்களுக்கிடையில்
தொழில்முயற்சி உரிமைகளை
உள்ளிட்ட ஏனைய உரிமைகளைப்
பகிர்ந்துகொள்ள உரிமையை
வழங்கவேண்டுமென்பதுடன்
»
அரசாங்கத்துடன் பேரம் பேசவல்ல
பலத்தைக் கொண்ட
ஒழுங்கமைந்ததும்
அபிவிருத்தியடைந்ததுமான
சிவில் சமூக வலையமைப்பு
உருவாக்கப்பட
வேண்டுமென்பதும் எமது
நம்பிக்கையாகும்.