தமக்கென வீடொன்றினைக் கட்டியெழுப்ப
இயலாதுள்ள மிகவும் வறியவர் களுக்கு
கைகொடுத்து உதவ இக்கருத்திட்டம்
உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கீழ்
1.
தனக்குச் சொந்தமான காணியின்
சட்டபூர்வ உரிமையினை ஏற்கனவே
கொண்டுள்ள ஆட்களுக்கு
முழுமையான வீட்டினை உங்கள்
அனுசரணை மூலமாக கட்டியெழுப்பி
நன்கொடையாக வழங்கலாம்.
2.
தனக்குச் சொந்தமான காணியில்
பகுதியளவில்
கட்டியெழுப்பியுள்ள
வீட்டினைத் திருத்தியமைத்தல்,
முன்னேற்றகரமாக்குதல், மலசல
கூடங்களை அமைத்தல், கிடுகு
கூரைக்குப் பதிலாக
மாற்றீட்டினை அமைத்துக்
கொள்ளல், நீர் மற்றும்
மின்சார வசதிகளைப்
பெற்றுக்கொள்ள நீங்களும் உதவி
வழங்க வாய்ப்பு
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உங்களின் அல்லது காலஞ்சென்ற உறவினரது
பெயரில் இவ்வணுசரணையை வழங்கலாம்.
தகைமையுடையவர்களை இனங்காணல்
கிராம உத்தியோகத்தரும் பிரதேச
செயலாளரும் மேலொப்பமிட்டு வழங்குகின்ற
குறைந்த வருமானம் பெறுநர்களுக்கான
சான்றிதழ், தற்போது அபிவிருத்தி
செய்யப்பட உத்தேசித்துள்ள பகுதியளவில்
கட்டப்பட்ட வீட்டின் நிழற்படம்,
நிலையப் பரிசோதனை மாத்திரமன்றி தொடர்
நடவடிக்கையும் எம்மால் தீவிரமாக மேற்
கொள்ளப்படும்.
அனுசரணையாளர்களுக்கும் மேற்படி
தகவல்கள் தொடர்ச்சியாக வழங்கப்படும்.